காஞ்சிபுரம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் வகையிலும் , கல்விக்கான பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில் விலையில்லா மிதிவண்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயின்ற 5076 மாணவருக்கு, 4475 மாணவர்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 9551 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு பள்ளிகளில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் 1170 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.