புதுடெல்லி: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வரும் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குa ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த ஆக. 5ம் தேதி இங்கு 2,202 பேர் புதிதாக பாதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் தினமும் சராசரியாக 2,135 பேரும், கேரளாவில் 2,347 பேரும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது.