பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஏராளமானோர் வந்து செல்வதாகவும், சந்தேகப்படும்படியான வேலைகள் அங்கு நடைபெறுவதாகவும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 12 போலீஸ்காரர்கள் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு, 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள், ஒரு திருநங்கை மற்றும் சில ரவுடிகள் உள்பட 9 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அங்கிருந்து கஞ்சா மற்றும் 5 கத்திகள், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டின் உரிமையாளர் தாரணி (24) என்பதும், அவரது அக்கா வினோதினி (25) என்பதும் தெரிய வந்தது.