மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலத்தைச் சேர்ந்த வரதராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக 2018ல் தேர்வு செய்யப்பட்டேன். போர்வெல் கிணறு அமைக்க ஒருவருக்கு ரூ.4 லட்சம் கடன் தருமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியது. சங்கத்தின் தீர்மானமின்றி கடன் வழங்க கூறியதற்கு நான் ஒத்துழைக்காததால் என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.