திருவிடைமருதூர் : திருப்பனந்தாள் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த மறைமுக ஏலத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு சார்பில் திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று 7வது வாரமாக மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் திருமங்கலகுடி, இடையாநல்லுார், சூரியமூலை, திருலோக்கி, முட்டக்குடி, சிற்றிடையாநல்லுார், கட்டாநகரம், அணைக்கரை, சிக்கல்நாயக்கன்பேட்டை, மணிக்குடி, தத்துவாஞ்சேரி, சாத்தனுார், பட்டம் மற்றும் 50க்கும் மேற்பட்ட சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 85 விவசாயிகள் மொத்தம் 357 லாட் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.