புதுடெல்லி: கியூட் எனப்படும் பொது நுழைவு தேர்வின் முதல்கட்ட தேர்வு. கடந்த மாதம் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 489 மையங்களில் 2ம் கட்ட தேர்வு நேற்று முன்தினம் காலை துவங்கியது. காலை 9 மணிக்கு ஒரு தேர்வும் (முதல் ஷிப்ட்), மதியம் 3 மணிக்கு (2வது ஷிப்ட்) இன்னொரு தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளினால் பல மையங்களில் தேர்வு துவங்குவது தாமதமானதால் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர்.