உத்திரமேரூர்: உத்திரமேரூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. மேலும் பேதிய இடவசதியும் இல்லாமல் இருந்தது. இதனால் அரசாங்க கோப்புகளை பாதுகாப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதனை போக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் தலைமை தாங்கினார்.