N.L.C நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: N.L.C நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க பிரதமர் மோடிக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். GATE தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்ககூடாது என உத்தரவிட வேண்டும். பயிற்சி பொறியாளர் பணிக்கு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை தரவேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.    

தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான N.L.C திட்டங்கள் மற்றும் சுரங்களுக்கு நிலம் வழங்கிய குயிடும்பங்களை சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப்பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என 2022-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி, தான் ஏற்கனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப்பட்டதாரி பணிக்கு தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சமாதானமாக முடிவு எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: