உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சித்தாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கனகா (68). இவர் தனது மகன் சக்திவேல், மருமகள் தீபிகா உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சக்திவேல் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் குன்றத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கனகா மட்டும் நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது சக்திவேல் தங்கியிருந்த அரையின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.