உத்திரமேரூர் அருகே வீட்டை உடைத்து 7 சவரன் திருட்டு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சித்தாலப்பாக்கம்  கிராமத்தை சேர்ந்தவர் கனகா (68).  இவர் தனது மகன் சக்திவேல், மருமகள் தீபிகா உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சக்திவேல் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் குன்றத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கனகா மட்டும் நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது சக்திவேல் தங்கியிருந்த அரையின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தது. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 சவரன் நகை திருடு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து கனகா, சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்து எவ்வாறு திருடியிருப்பான் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: