சென்னை: மருத்துவ அறிவியல்கள் தேர்வுகளுக்கான தேசிய வாரியத்தின் 21வது பட்டமளிப்பு விழா டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், சென்னை அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறையைச் சேர்ந்த டிப்ளமேட் ஆஃப் நேஷனல் போர்டு கல்வித் திட்டத்தின் பயின்று சிறப்பான செயல்திறனை கல்வியில் நிரூபித்திருப்பதற்காக டாக்டர். ஜெயந்திக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மாணவியும், இரு குழந்தைகளின் அம்மாவுமான டாக்டர். ஜெயந்தி 2017ம் ஆண்டில் அகர்வால் கண் மருத்துவமனையில் (கண் மருத்துவவியலில் - தேசிய போர்டு) கல்வித் திட்டத்தில் சேர்ந்து 2020ம் ஆண்டில் வெற்றிகரமாக அதை நிறைவு செய்தார்.