பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறி வருகிறது. இந்நிலையில்தான் சீனாவின் எதிர்பபையும் மீறி தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி சென்றுள்ளார். இதனை காரணமாக வைத்து சீனா, தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் நேற்று நான்சி பெலுசி தைவான் வைபே நகருக்கு சென்றபோது சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்தன. இது சீனாவின் போர் முன்னோட்டம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.