கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கூட்டத் ெதாடர் இன்று தொடங்கிய நிலையில், ஜனாதிபதி என்பவர் அரசனோ, கடவுளோ அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பேசினார். தொடர்ந்து அவை நடவடிக்கைகள் 9ம் தேதி அவை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ெதாடங்கியது. நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே சம்பிரதாய முறைப்படி அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். அப்போது அரசின் கொள்கை அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் விநியோகம் தற்போதுள்ள நடைமுறையின்படியே பின்பற்றப்படும். அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும். நீண்ட கால பொருளாதார கொள்கை திட்டத்தின்படி வரும் 2048ம் ஆண்டுக்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்.
ஜனாதிபதியின் பதவியை அரச குடும்பமாக கருதக்கூடாது. ஜனாதிபதியை அரசனாகவோ, கடவுளாகவோ கருதக்கூடாது. அதேநேரம் ஜனாதிபதிக்கு மன்னருக்கு நிகரான அதிகாரங்கள் உள்ளன. பழங்கால மன்னரை விட தற்போதைய ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. அதை உடனடியாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி பதவியில் இருப்பவர் நாட்டின் குடிமகன் மற்றும் மக்கள் பிரதிநிதி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். விசேஷ கொடிகள் மற்றும் சின்னங்கள் மூலம் ஜனாதிபதியை முன்னிலைப்படுத்தக் கூடாது. அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையை கொண்டுவரும் வகையில் 22வது திருத்தத்திற்கு (22ஏ) நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்று அந்த உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவரது உரை முடிவுற்றவுடன் வரும் 9ம் தேதி நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கைக்கு உயிர் மூச்சை அளித்துள்ளது. எங்களது மக்கள் சார்பாகவும், எனது தனிப்பட்ட முறையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொருளாதார மீட்பு திட்டங்களுக்கான எனது முயற்சிகளுக்கு இந்தியா ெதாடர்ந்து உதவிகளை வழங்கும் வேண்டும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்’ என்று கூறினார்.