காஞ்சிபுரம்: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவு பெறுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஆவணப்படம், கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மணல் ஓவியங்கள் என வெளிநாட்டினர் அசந்துபோகும் அளவுக்கு தொடக்கவிழா இருந்தது.