பெரியபாளையம்: பெரியபாளையம் பகுதியில் பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திவந்த நபரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பெரியபாளையம் பகுதி வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியபாளையம் அடுத்த ஆரணி மசூதி தெரு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது குமரப்பேட்டை மதுபான கடைலிருந்து ஆரணி மசூதி வழியாக கன்னிகைபேர் நோக்கி வந்துகொண்டிருந்த பைக்கை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.