பெரியபாளையம் அருகே பைக்கில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

பெரியபாளையம்: பெரியபாளையம் பகுதியில் பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திவந்த நபரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பெரியபாளையம் பகுதி வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியபாளையம் அடுத்த ஆரணி மசூதி தெரு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது  குமரப்பேட்டை  மதுபான கடைலிருந்து ஆரணி மசூதி வழியாக கன்னிகைபேர் நோக்கி வந்துகொண்டிருந்த பைக்கை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் 121 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்திவந்ததாக கன்னிகைபேர் பகுதியை சேர்ந்த விக்னேைஷ(24) கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து பைக்கையும் கைப்பற்றினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: