மதுரை: டைப்ரைட்டிங் தேர்வை பழைய நடைமுறைப்படியே நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு டைப்ரைட்டிங் - சுருக்கெழுத்து கணினி பயிற்சி மைய சங்கத் தலைவர் சோம.சேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ கடந்த 75 ஆண்டுகளாக டைப்ரைட்டிங் தேர்வு நடக்கிறது. தற்ேபாது இந்த நடைமுறையில் மாற்றம் செய்துள்ளனர். 2வது தாளை முதலாவதாகவும், முதல் தாளை இரண்டாவதாகவும் மாற்றியுள்ளனர். திடீரென மாற்றியுள்ளதால் தேர்வர்களின் திறன் பாதிக்கும்.