புதுடெல்லி: கியூட் பொது நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் 66 ஒன்றிய பல்கலைக் கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படும். இதற்கான கியூட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தியாவில் 500 நகரங்களிலும், வெளிநாட்டில் 13 நகரங்களிலும் நடத்தப்படும். இதில், சுமார் 3.57 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள்,’ என்று கூறியுள்ளார்.