திருத்தணி: ஒன்றிய அரசை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கரிமுல்லா தலைமை வகித்தார். வட்ட செயலாளர் அந்தோணி, வட்டக்குழு நிர்வாகிகள் வி. பாலாஜி, கே. ஜெய்சங்கர், சின்னத்துரை, பிருந்தாவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.