நீடாமங்கலம் வழியாக மன்னார்குடியிலிருந்து மானாமதுரைக்கு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வழியாக மன்னார்குடியிலிருந்து மானாமதுரைக்கு நேற்று முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக காலை 6.50 மணியளவில் மானாமதுரைக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று மீண்டும் மாலை நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி வந்து சேரும். இது தினசரி ரயில் ஆகும். கொரோனா காலம் தொடங்கியவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மானாமதுரை ரயில் நிறுத்தப்பட்டது.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள், விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டது. மானாமதுரை பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. இந்த ரயிலில் காலை தஞ்சை, திருச்சி செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வோர், வர்த்தகர்கள் என எல்லா தரப்பினரும் பயனடைந்த இந்த ரயிலை மீண்டும் இயக்கிட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று ரயில்வே துறையினர் நேற்று காலை முதல் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரைக்கு பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. ரயில் மீண்டும் இயக்கப்பட்டதற்காக பயணிகள் ரயில்வே துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: