கொல்கத்தா: அமலாக்கத் துறை சோதனையில் சிக்கியது தனது பணம் அல்ல என்று மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்தா சட்டர்ஜி புலம்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜியையும், அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அர்பிதாவின் வீடுகளில் பதுக்கியிருந்த ரூ.49 கோடி பணம், 6 கிலோ தங்கக் குவியல் பறிமுதல் செய்யப்பட்டது.