சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் சட்டரீதியிலான போராட்டங்கள் நீடிப்பதால் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘‘எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளாக சிலரது பெயரை அறிவித்துள்ளார். இது சட்ட விரோதமான அறிவிப்பு ஆகும். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது என்னிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. புதிய நிர்வாகிகளை நியமிக்க எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது, அதை நிராகரிக்க வேண்டும்.