பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்எல்சி நிறுவனம், வேலைவாய்ப்புகளில் 100% பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்எல்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சை துரோகம் ஆகாதா. உடற் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 விழுக்காடு என்எல்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

Related Stories: