கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை: திருச்சி சிவா பங்கேற்பு

பெரம்பூர்: இளைஞர்களிடம் திராவிட மாடல் கொள்கையே கொண்டு செல்லவும், அவர்களது திறமையை வளர்த்துக் கொள்ளவும் திமுக இளைஞர் அணி சார்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, மாணவர் அணி இணை செயலாளர் கோவி.செழியன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருச்சி சிவா, அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக மற்றும் அதன் வரலாறு குறித்தும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் குறித்தும் விரிவாக இளைஞர்களிடம் எடுத்துரைத்தார். மேலும் திமுக தலைவர்களின் வரலாறு. கழக மாநாடுகள் என பலவற்றை பட்டியலிட்டு பேசினார். மேலும், எனது கண்டிப்பு உனக்கு கசக்கவில்லை என்றால் உனக்கு வெற்றி நிச்சயம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மற்ற கட்சிகளோடு ஒப்பிடுவையில் நாம் ஏன் திமுகவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் நன்கு புரிந்து அதன் பிறகு தங்களை இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.

Related Stories: