கராச்சி: அனைத்து தடைகளையும் முறியடித்து, பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி.யாக மனிஷா ரோபெட்டா பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஜகோபாபாத் பகுதியை சேர்ந்தவர் மனிஷா ரோபெட்டா (26). இவர் கடந்த ஆண்டு சிந்து அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்பிஎஸ்சி) நடத்திய தேர்வில் 152 வெற்றியாளர்களில் 16வது இடத்தை பிடித்தார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி.யாகும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளார். தற்போது பயிற்சியில் உள்ள ரோபெட்டா, பயிற்சி நிறைவு செய்ததும், குற்றங்கள் நிறைந்த லியாரி பகுதியில் டிஎஸ்பி.யாக பதவியேற்க உள்ளார்.