கொடைக்கானல்: கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து எழுப்பப்படும் ராட்சத சுவரை அகற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் இயற்கை எழில் கொஞ்சும் தூண் பாறையை பார்வையிடவே சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புவர். மேகங்கள் தவழும் இரண்டு தூண்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் திரண்டு நிற்கும். தற்போது தூண் பாறையை சாலையில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு ராட்சத சுவர் ஒன்றை வனத்துறை கட்டி வருகிறது.