திருச்சி: திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் கடந்த 2012, மார்ச் 29ம் தேதி அதிகாலை கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி-கல்லணைரோட்டில் பொன்னிடெல்டா பகுதி அருகே காவிரி ஆற்றங்கரையோரம் வீசப்பட்டு கிடந்தது. ரங்கம் போலீசார், சிபிசிஐடி போலீசார், சிபிஐ அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் விசாரணை நடத்தியும் இதுவரை கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை.கொலை நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு கோர்ட் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.