டெல்லி : இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் பங்கேற்று இருக்கும் நிலையில், முதல் நாளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி என்டர்ப்ரைஸிஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாளில் 4 சுற்றுகள் வரை ஏலம் நடந்த நிலையில் 1.45 லட்சம் கோடி ரூபாய் ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.