புதுடெல்லி: சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 3 இடங்கள் உட்பட 5 இடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘ராம்சர்’ எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேர்க்கப்பட்டு, அவை பேணி பாதுகாக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 3 இடங்கள் உட்பட மேலும் 5 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு மற்றும் மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப் பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்பு நிலம் ஆகிய 5 இடங்கள் இடம்பெற்று உள்ளது.