எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்பட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ்

சென்னை: எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என 5 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், சிறுணியம் பி.பலராமன் (திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்), எம்.சி.சம்பத் (முன்னாள் அமைச்சர்), சொரத்தூர் ராஜேந்திரன் (அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்), பி.பாலகிருஷ்ண ரெட்டி (முன்னாள் அமைச்சர்), உடுமலை ராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்), ஆர்.கே.ரவிச்சந்திரன் (விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்), கே.டி.ராஜேந்திர பாலாஜி (முன்னாள் அமைச்சர்), சி.கிருஷ்ணமூர்த்தி (தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்), கடம்பூர் ராஜு (முன்னாள் அமைச்சர்), வி.எஸ்.சேதுராமன் (வழக்கறிஞர் பிரிவு தலைவர்) ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: