கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும்போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு நெய்வேலி அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.