அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கார் கண்காட்சியில் புகுந்த மர்ம நபர் திடீர் தாக்குதல்

அமெரிக்கா: அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்து உள்ளனர்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டெக் பார்க் என்ற இடத்தில் கார் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் கூட்டத்தில் ஊடுருவிய மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில், ஏழு பேர் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. தகவலறிந்து, நிகழ்விடத்துக்கு சென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய எழுவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அதில் ஒரு பெண் உள்ளிட்ட இருவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்துள்ள 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்மநபரை கவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

Related Stories: