சென்னை: தமிழகத்தில் 7,689 மையங்களில் 22.02 லட்சம் பேர் எழுதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர் ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் பெண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.