சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கட்சிக்குள் கலவரம், வழக்கு, ரகசிய பேச்சுவார்த்தை என குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், மாறி மாறி கட்சியின் நிர்வாகிகளை, அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: