கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கிவிட்டதாக எஸ்.பி. பகலவன் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி, பள்ளி வாகனங்கள், மேஜை , நாற்காலி, மாணவர்களின் சான்றிதழ் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர்.