ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மதுரை மண்டல சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இத்தொடரில் மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியை மாநில கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளை வாழ்த்தினார். 3 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் சிறப்பிடம் பிடிக்கும் அணிகள், மாநில சாம்பியன் போட்டிகளுக்கு முன்னேறும்.