கள்ளத்தொடர்பு பிடிக்காததால் ஆத்திரம் தந்தையை கத்தியால் சரமாரி குத்திய மகன்: போலீசில் சரண்

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த எஸ்.கொளத்தூர், விநாயகபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(48). கார்பென்டர் வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி பார்வதி கடந்த 2009ம் ஆண்டு இறந்துவிட்டார். செல்வம் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். செல்வத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இது மூத்த மகன் கவியரசுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கவியரசு வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்தார். இதனால் மகனுக்கும், தந்தைக்கும்  தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவியரசு காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தனது தந்தையின் வலது மேல் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல்  உதவி சிகிச்சை பெற்று வந்த நிலையில்  மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு கவியரசு தானாக பள்ளிக்கரணை காவல் நிலையம் வந்து சரணடைந்தார். அவரை   போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: