அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று காலை போலீசார் அங்கு மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கிருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் விரட்டி சென்று மடிக்கி பிடித்தனர். வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.