பெண்ணின் காதை அறுத்து 2 சவரன் கம்மல் பறிப்பு: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

சென்னை: வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெருவை சேர்ந்தவர் சாந்தி (45). வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க கம்மலை கேட்டுள்ளனர். சாந்தி தர மறுத்ததால், கத்தியால் அவரது காதை அறுத்து, 2 சவரன் தங்க கம்மலை பறித்து தப்பினர். காயமடைந்த சாந்தி அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சாந்தி, நேற்று வில்லிவாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: