டெல்லி: நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி பிரச்சனையை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, சபாநாயகர் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். விலைவாசி பிரச்சனை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று, அவர்கள் குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.