லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஈடுப்பட்டுள்ளது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பிகள், ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, 3 சுற்றுகளாக நடந்த வாக்கு பதிவு முடிவில் கன்சர்வேடிவ் கட்சியின் 357 எம்.பிகள் வாக்கு அளித்தன.