மேட்டூர் அணையில் இருந்து 1,33,000 கன அடி நீர் திறப்பு

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை, ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 839 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 403 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: