ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு நடத்தினார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில், சொத்து வரி சீராய்வு சம்பந்தமாக, கட்டிடத்தின் அளவீடு பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணிகளை திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் திடீரென நேரில் வந்து ஆய்வு நடத்தினார். பின்னர், பஸ் நிலையம் அருகில் உள்ள தாமரை குளம் மற்றும் 5வது வார்டில் உள்ள குயவன் குளம் ஆகிய குளங்களில் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார்.