ஆடி மாத பூஜைகளுக்காக 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

 தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.  அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். இதையடுத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: