கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சுற்றுலா பயணிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி பானிபூரி விநியோகித்தார். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்படும் பானிபூரி கடையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி, மிருதுவான ஹாலோ பூரிகளில் மசித்த உருளைக்கிழங்கை வைத்து புளி தண்ணீரில் நனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியல் களத்தில் தன் அதிரடி நடவடிக்கைகள், கருத்துகளால் என்றும் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது தன் தனித்துவமான நடவடிக்கையால் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.