காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்தோர்களுக்கு பொற்கிழி உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்: எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், இளைஞரணி திமுக செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திமுக மூத்தோர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார். இதற்காக பத்தாயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 99 என்ற தலைப்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் திமுக மூத்த மூத்தோர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, நாளை (14ம் தேதி) வியாழக்கிழமை நாளை காலை 10 மணி அளவில் உத்திரமேரூர் அருகே கலைஞர் திடலில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியையோட்டி, பத்தாயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் திமுக கொடிகளும், தோரணங்களும், பதாகைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் அனைவரையும் வரவேற்க உள்ளார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் நன்றியுரை ஆற்ற உளளார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ கலந்து கொண்டு திமுக மூத்தோர்களுக்கு பொற்கிழி, நலிவடைந்த ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த திமுகவினர்களுக்கு நிதியுதவி உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சி தெற்கு மாவட்ட திமுகவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related Stories: