புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கார்த்திக் உள்பட தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம் ஆகியோர் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.