சென்னை: எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லுபடியாகும் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று சசிகலா அளித்த பேட்டி: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இது போன்ற நிகழ்வை செய்ய மாட்டார்கள். சொந்த நலனுக்காக கூட்டப்பட்ட பொதுக்குழுவாக தான், நான் இதை பார்க்கிறேன். என்னுடைய வழக்கு நிலுவையில் இருக்கும்போது இது போன்ற கூட்டம் நடத்தியதே தவறு. எடப்பாடி, பொதுச்செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லுபடி ஆகும். கடந்த காலங்களில் பொதுக்குழுவில் வரவு-செலவு அறிக்கை என்பதை பொருளாளர் தான் வாசிப்பார். ஆனால் தற்போது பொருளாளர் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது. வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.