சென்னை: திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் பனகல் அரசர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதல்வர் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று. சமூகநீதிக்கு அடித்தளமிட்ட வகுப்புவாத பிரதிநிதித்துவத்திற்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையை காக்கின்ற வகையில் இந்து அறநிலைய சட்டத்தை நிறைவேற்றியவர்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளை பிறப்பித்தவர். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்க செய்தவர்.