குலசேகரம்: கும்பாபிஷேகம் நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து மாலையில் கொடியேற்றத்துடன் 6 நாள் திருவிழா தொடங்கியது.குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று (9ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு பூஜை, 72 அடி உயர தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்ச பூஜை, அபிஷேகம், அன்னதானம் நடந்தது.