தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணம் அரசு பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழா

கும்பகோணம்: தமிழகத்திலேயே முதன்முறையாக பள்ளி கல்வித்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில்ம் சிறார் திரைப்பட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஒரு சிறார்களுக்கான திரைப்படம் திரையிடப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பொறுப்பாசிரியர் இருப்பார், அவருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

மாநில அளவில் மாணவர்கள் எழுதும் சிறந்த 15 விமர்சனங்கள் திரைப்பட வல்லுனர்களால் தேர்வு செய்யப்படும். அப்படி சிறந்த விமர்சனங்கள் அளிக்கும் 15 மாணவ மாணவியர்கள் தமிழக அரசு சார்பில், வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: