குன்னூர்: குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனை பகுதியில் கடும் பனி மூட்டத்தை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குன்னூர், அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு மற்றும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து. குன்னூர் நகர் பகுதியில் பெய்த மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணித்தனர்.